2018-03-19 14:55:00

ஸ்காட்லாந்து கர்தினால் பாட்ரிக் ஓ'பிரையன் மரணம்


மார்ச்,19,2018. ஸ்காட்லாந்து நாட்டின் கர்தினால், கீத் மைக்கில் பாட்ரிக் ஓ'பிரையன் அவர்கள், மார்ச் 19, இத்திங்கள் அதிகாலையில், தன் 80வது வயதில், இறைவனடி சேர்ந்தார்.

1938ம் ஆண்டு வட அயர்லாந்தின் Ballycastle எனும் ஊரில் பிறந்த கீத் மைக்கில் அவர்கள், 1965ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 1985ம் ஆண்டு ஆயராகவும் அருள் பொழிவு பெற்றார்.

புனித அந்திரேயா, மற்றும் எடின்பர்க் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக 1985ம் ஆண்டு முதல் பணியாற்றிவந்த கீத் மைக்கில் அவர்களை, 2003ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் கர்தினாலாக உயர்த்தினார்.

2002ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு முடிய, ஸ்காட்லாந்து ஆயர் பேரவையின் தலைவராகப் பணியாற்றி, 2013ம் ஆண்டு ஒய்வு பெற்ற கர்தினால் ஓ'பிரையன் அவர்கள், மார்ச் 19, இத்திங்களன்று இறையடி சேர்ந்தார்.

இவரது மறைவையொட்டி, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 214 ஆக குறைந்துள்ளது. இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி உள்ளவர்கள் 117 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.