2018-04-02 15:35:00

புனித வாரத்தில் எல்சால்வதோரில் அருள்பணியாளர் கொலை


ஏப்.02,2018. எல் சால்வதோர் நாட்டில் பெரிய வியாழன் சிறப்பு வழிப்பாட்டு சடங்குகளை நிறைவேற்றச் சென்ற வழியில், தீவிரவாதக் கும்பல் ஒன்றால் அருள்பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டது குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது, அந்நாட்டு தலத்திருஅவை.

தன் பங்குதள விசுவாசிகளுடன் சான் மைக்கேல் என்ற ஊரின் பெரிய வியாழன் கொண்டாட்டங்களுக்கு அருள்பணியாளர் Walter Vasquez Jimenez சென்ற வழியில், அவரின் வாகனத்தை வழிமறித்த முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, வாகனத்திலிருந்த அனைத்து உடைமைகளையும் கைப்பற்றியபின், அருள்பணியாளரை மட்டும் கடத்திச்சென்று, சுட்டுக் கொன்றுள்ளது.

36 வயதான அருள்பணியாளர் Vasquez அவர்களின் மரணம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட தலத்திருஅவை அதிகாரிகள், அவர் ஏற்கனவே கொலை மிரட்டல்களை பல முறை பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

அருள்பணியாளர் Vasquez அவர்களின் மரணம் குறித்து உடனடியாக விசாரணைகள் துவக்கப்பட்ட வேண்டும் என, அரசுக்கும், காவல் துறைக்கும், விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது, எல் சால்வதோர் தலத்திருஅவை

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.