2018-04-04 15:13:00

அன்பின் வல்லமையை வலியுறுத்தும் டுவிட்டர் செய்தி


ஏப்.04,2018. பாஸ்கா எண்கிழமையில் இடம்பெறும் இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தி, அன்பின் வல்லமையை வலியுறுத்தும் வண்ணம் அமைந்திருந்தது.

"வெற்றிகொள்ள இயலாத ஒரே ஆயுதம் அன்பு ஒன்றே, ஏனெனில், தீமையின் சக்திகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை அன்புக்கு மட்டுமே உள்ளது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக பதிவாகியிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஏப்ரல் 4, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1511 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 74 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், ஏப்ரல் 8, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் இறை இரக்கத்தின் ஞாயிறையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் காலை 10.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நடத்துவார் என்று, திருப்பீட திருவழிபாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.