2018-04-21 14:20:00

இமயமாகும் இளமை - "என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்"


ஏப்ரல் 22, இஞ்ஞாயிறன்று, நல்லாயன் ஞாயிறு, இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாள் என்ற இரு எண்ணங்கள் சிறப்பிக்கப்படுகின்றன. இவ்விரு எண்ணங்களையும் இணைக்கும் இரு இளையோரை மையப்படுத்திய ஓர் உண்மைச் சம்பவம் இது.

கொரியாவில் நடந்துவந்த போரின் உச்சக்கட்டம். போரில் காயப்பட்டு, உயிருக்குப் போராடிவந்த ஒரு வீரர், இறப்பதற்கு முன், ஓர் அருள்பணியாளரைச் சந்திக்க வேண்டுமென்ற தன் ஆவலை வெளியிட்டார். அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தவர் திகைத்தார். இந்தப் போர்க்களத்தில் அருள்பணியாளருக்கு எங்கே போவது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த வீரருக்கு அருகில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்றொரு வீரர், "நான் ஓர் அருள்பணியாளரை்" என்று தன்னையே அறிமுகப்படுத்தினார். அவரது நிலையைக் கண்ட மருத்துவர், "நீங்கள் அசையாதீர்கள். அசைந்தால், உங்கள் உயிருக்குப் பெரும் ஆபத்து." என்று அந்த அருள்பணியாளரிடம் எச்சரித்தார். அதற்கு அந்த அருள்பணியாளர், "நான் வாழப்போகும் இந்த ஒரு சில மணித்துளிகளை விட, என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்" என்று சொன்னபடி, தன்னிடம் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம் திரட்டி, தரையோடு தரையாக ஊர்ந்து வந்தார். சாகும் நிலையில் இருந்த அந்த வீரரின் இறுதி நேரத்தில் அவருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். அந்த வீரரும், அருள்பணியாளரும் அமைதியாக இறந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.