2018-04-23 15:28:00

திருத்தந்தையின் நாம விழாவன்று வீடற்றோருக்கு ஐஸ் கிரீம்


ஏப்.23,2018. "இறைவனின் வாக்கு, எதிர்காலத்தைக் காண்பதற்கு நாம் கொண்டிருக்கும் விளக்கு. அதன் ஒளியில் நாம் காலத்தின் அடையாளங்களைப் புரிந்துகொள்கிறோம்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவாகியுள்ளன.

ஏப்ரல் 22ம் தேதி சிறப்பிக்கப்பட்ட நல்லாயன் ஞாயிறன்று இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "இறைவன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். அவரது ஒவ்வோர் அழைப்பும் நம்மை மகிழ்வில் நிறைக்கிறது" என்ற சொற்களை தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், ஏப்ரல் 23 இத்திங்களன்று கொண்டாடப்பட்ட புனித ஜார்ஜ் திருநாளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பாதுகாவலரின் திருநாளைச் சிறப்பித்ததையொட்டி, உரோம் நகரில், வீடற்ற வறியோர் 3000 பேருக்கு திருத்தந்தையின் பெயரால், ஐஸ் கிரீம் வழங்கப்பட்டதாக, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்கு பொறுப்பான அலுவலகம் அறிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.