2018-05-01 16:10:00

முதிர்ச்சியடைந்த நாட்டுப்பற்று, தேசியவாதத்தை உள்ளடக்காது


மே,01,2018. முதிர்ச்சியடைந்த நாட்டுப்பற்று, தேசியவாதத்தையோ, பிற கலாச்சாரங்களையும் பாரம்பரியங்களையும் ஒதுக்கி வைப்பதையோ குறிப்பிடவில்லை, என போலந்து ஆயர்கள் வெளிநாடுகளில் வாழும் தங்கள் நாட்டு மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

போலந்தின் அரசி அன்னை மரியா, என்ற விழா போலந்து நாட்டில் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட உள்ளதையொட்டி, நாட்டிற்கு வெளியே வாழும் ஏறத்தாழ 2 கோடி போலந்து மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள போலந்து ஆயர்கள், போலந்து மக்கள், தற்போது வாழ்ந்து வரும் வெளிநாடுகளில், அங்குள்ள பங்குதள வாழ்வில் பங்கேற்று, அவற்றின் வளர்ச்சிக்காக உழைக்கவேண்டும் என்று, அதில் விண்ணப்பித்துள்ளனர்.

ஒவ்வொரு போலந்து கத்தோலிக்கரும் தாங்கள் வாழும் இடத்தில், நற்செய்தியின் சான்றாக விளங்கி, அப்பகுதியின் முன்னேற்றத்திற்காக உழைக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளனர் ஆயர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.