2018-05-02 15:59:00

200 கோடி தொழிலாளர்கள் அமைப்புமுறை சாரா துறைகளில்...


மே,02,2018. உலகின் தொழிலாளர்களில் 61 விழுக்காட்டிற்கும் அதிகமானோர், அதாவது ஏறக்குறைய 200 கோடிப் பேர் அமைப்புமுறை சாரா துறைகளில் வேலை செய்கின்றனர் என்று, ILO எனப்படும் உலக தொழில் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகின்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் எடுத்த ஆய்வின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ள ILO நிறுவனம், அமைப்பு முறை சாராத் தொழிலாளர்களில் ஏறக்குறைய 93 விழுக்காட்டினர், வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர் என்று கூறியுள்ளது.

ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 68.2 விழுக்காடு, ஆப்ரிக்காவில், 85.8 விழுக்காடு, அரபு நாடுகளில் 68.6 விழுக்காடு, அமெரிக்கா நாடுகளில் 40 விழுக்காடு என, அமைப்பு முறை சாராத் தொழிலாளர்கள் உள்ளனர் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.