2018-05-31 15:07:00

நேர்காணல் – உலக அமைதிக்காக மாரத்தான் ஓட்டம்


,31,2018. திரு.சுரேஷ் சுவக்கிம் அவர்கள், இலங்கை யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் வாழ்ந்த இவர், கடந்த 13 ஆண்டுகளாக கானடாவில் வாழ்ந்து வருகிறார். நல்லதொரு வருங்காலத்தை உருவாக்கும் நோக்கத்தில், பிறரன்புப் பணிகளுக்கு நிதி திரட்டிக்கொடுக்கும் எண்ணத்தில், உலக அமைதிக்காக மாரத்தான் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளார், சுரேஷ் சுவக்கிம். 2017ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்மஸ் பெருவிழா நள்ளிரவில், பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்தில், அமைதிச் சுடரை ஏற்றி ஓடத் தொடங்கிய இவர், ஒன்பது மாதங்களில், ஏழு கண்டங்களில், 72 நாடுகள் வழியாக, 123 நகரங்களில் ஓடி, 2 கோடியே 70 இலட்சம் டாலர் நிதி திரட்டும் திட்டத்தில் உள்ளார். 2018ம் ஆண்டு செப்டம்பரில் Torontoவில் தன் ஓட்டத்தை நிறைவு செய்யும் திட்டத்திலும் உள்ளார் சுரேஷ். கடந்த இருபது ஆண்டுகளில் அறுபதுக்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கின்றார் திரு.சுரேஷ் சுவக்கிம்.      

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.