2015-03-26 16:32:00

குர்காவோனில், புதிய சீரோ மலங்கரா மறைமாவட்டம்


மார்ச்,26,2015. டில்லிக்கு அருகே உள்ள குர்காவோன் (Gurgaon) நகரில், சீரோ மலங்கரா புதிய மறைமாவட்டம் ஒன்றை, புனித John Chrysostom பெயரால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று உருவாக்கியுள்ளார்.

இந்தியாவுக்கு வெளியே வாழும் சீரோ மலங்கரா மக்களின் திருத்தூது மேய்ப்பராகப் பணியாற்றி வந்த ஆயர் Jacob Mar Barnabas Aerath அவர்களை, இந்தப் புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

1960ம் ஆண்டு கேரளாவின் திருவள்ளாவில் பிறந்த Barnabas Aerath அவர்கள், 1986ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 2007ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். நன்னெறி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர்.

மேலும், மகாராஷ்டிரா மாநிலம், Khadki நகரில், புனித Ephrem பெயரில், அப்போஸ்தலிக்க நிர்வாக வட்டத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று உருவாக்கி, அதன் முதல் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக, ஆயர் Thomas Mar Anthonios Valiyavilayil அவர்களை நியமித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.