2016-01-21 15:59:00

திருநற்கருணை, விண்ணையும், மண்ணையும் இணைக்கிறது


சன.21,2016. திரு நற்கருணை, விண்ணகத்தையும், மண்ணகத்தையும் இணைக்கிறது; இறைவனின் கரங்களை விட்டு விலகிப்போன படைப்பு, திரு நற்கருணை வழியே மீண்டும் அவருடன் இணைகிறது என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மார் கர்தினால் Charles Maung Bo அவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சனவரி 24ம் தேதி முதல், 31ம் தேதி முடிய பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு எனும் நகரில் நடைபெறவிருக்கும் அகில உலக திரு நற்கருணை மாநாட்டில், தன் சார்பில் கலந்துகொள்ளச் செல்லும் கர்தினால் Bo அவர்களுக்கு, திருத்தந்தை அவர்கள் அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.

செபு நகரில் நடைபெறவிருக்கும் 51வது அகில உலக திரு நற்கருணை மாநாட்டிற்கு, திருத்தந்தையின் சார்பில் செல்லும் யாங்கூன் பேராயர் கர்தினால் Bo அவர்களுடன், மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ், நியூ யார்க் பேராயர் கர்தினால் Timothy Dolan, நைஜீரியாவின் கர்தினால் John Onaiyekan, மற்றும் மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே ஆகியோரும், இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.