2016-04-28 16:15:00

2015ல் வத்திக்கான் மேற்கொண்ட நிதிநிலை விவரங்கள் அறிக்கை


ஏப்ரல்,28,2016. "மனிதகுலம் உருவாக்கும் ஆன்மீக, நன்னெறி பாதளங்களிலிருந்து, இறைவனின் அளவற்ற இரக்கமே நமக்கு மீட்பைக் கொணர முடியும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மேலும், 2015ம் ஆண்டில் வத்திக்கான் மேற்கொண்ட வரவு, செலவு மற்றும் நிதிநிலை விவரங்கள் அடங்கிய அறிக்கையொன்று, இவ்வியாழன் காலையில் வத்திக்கான் செய்தித் தொடர்பகத்தில் வெளியிடப்பட்டது.

நிதிநிலை விவரங்களின் துறையைச் சார்ந்த தலைவர், இயக்குனர், மற்றும், வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி ஆகியோர், இவ்விவரங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டனர்.

இவ்வறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக, வத்திக்கான் மேற்கொண்டு வரும் வரவு, செலவு செயல்பாடுகளில், ஒளிவு மறைவற்ற முறைகள் அதிகமதிமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.

வத்திக்கானின் வரவு, செலவு கணக்குகள், உலகத் தரம் வாய்ந்த நிதி தணிக்கையாளர்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற எண்ணத்துடன், 2010ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால், வத்திக்கான் நிதிநிலை விவரங்கள் துறை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.