2016-07-14 16:11:00

உலக இளையோர் நாள் நிகழ்வில் ஆயர்களின் மறைக்கல்வி உரைகள்


ஜூலை,14,2016. போலந்து நாட்டின் கிரகோவ் நகரில், ஜூலை 25ம் தேதி முதல், 31ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் 31வது உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளில், ஜூலை 27, 28, 29 ஆகிய நாட்கள் ஆயர்கள் நிகழ்த்தும் மறைக்கல்வி உரைகள் இடம்பெறும் என்று Zenit கத்தோலிக்க இதழ் கூறியுள்ளது.

ஜூலை 27ம் தேதி நடைபெறும் உரைகளில், 'இது இரக்கத்தின் காலம்' என்பது மையப்பொருளாகவும், 28ம் தேதி உரைகளில், 'கிறிஸ்துவின் இரக்கத்தால் தீண்டப்படுவதற்கு நம்மையே வழங்குவோம்' என்பது மையப்பொருளாகவும், 'உமது இரக்கத்தின் கருவியாக என்னை உருவாக்கும்' என்பது, ஜூலை 29ம் தேதியின் மைய பொருளாகவும் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைக் கல்வி உரைகளை பல்வேறு மொழிகளில் வழங்கும் ஆயர்களும், பேராயர்களும், தங்கள் அனுபவங்களிலிருந்து எடுத்துக்காட்டுகளை வழங்கி, இளையோர் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளத்திலிருந்து எழும் பதில்களைத் தருவர் என்றும் Zenit செய்தி கூறியுள்ளது.

புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் திருத்தலத்திலிருந்து இறை இரக்கத்தின் திருத்தலத்திற்கு உலக இளையோர் மேற்கொள்ளும் திருப்பயணங்கள், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் ஒரு முக்கிய அங்கமாக அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.