2016-10-28 15:24:00

இரு யாசிதி பெண்களுக்கு Sakharov மனித உரிமைகள் விருது


அக்.28,2016. 2016ம் ஆண்டின், ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக உயரிய Sakharov மனித உரிமைகள் விருது, Nadia Murad Basee, Lamiya Aji Bashar ஆகிய, இரு யாசிதி இனப் பெண்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருபெண்களும், 2014ம் ஆண்டு கோடை காலத்தில், ஈராக்கில், ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் பாலியல் வன்செயல் மற்றும் பாலியல் அடிமைமுறைக்கு உட்பட்டிருந்து, அதிலிருந்து தப்பித்து வந்தவர்கள்.

ஐம்பதாயிரம் டாலர் தொகையைக் கொண்ட Sakharov மனித உரிமைகள் விருது, நொபெல் அமைதி விருதுக்குச் சமமான, ஐரோப்பிய விருதாகும்.

2014ம் ஆண்டில், இவ்விருபெண்களுடன், ஆயிரக்கணக்கான யாசிதி இன இளையோரும், பெண்களும், ஐ.எஸ். இஸ்லாமிய அரசிடம், பாலியல் வன்செயல் மற்றும் பாலியல் அடிமைநிலைக்கு உட்பட்டிருந்தனர் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.