டிச.29,2016. 'மீட்பளிக்கும் மென்மையான கனிவால் நாம் தொடப்படுவோமாக. நமக்கு அருகில் வரும் இறைவனுக்கு நெருக்கமாக நாம் செல்வோம். சிறிது நேரம் மௌனமாக நின்று, குடிலை உற்று நோக்குவோம்' என்ற வார்த்தைகளை, இவ்வியாழன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்மஸ் காலத்தில், கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம், மற்றும், நம் அணுகுமுறைகள் குறித்து தன் டுவிட்டர் செய்திகளில் வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியில், இறைவனை நோக்கி நாம் செல்லவேண்டும் என்றும், அவரின் குடிலை உற்று நோக்கி, பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
@pontifex என்ற முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியம், ஆங்கிலம், இலத்தீன், அரேபியம் உட்பட ஒன்பது மொழிகளில் ஒவ்வொரு நாளும் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |