2017-03-10 15:15:00

இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி


மார்ச்,10,2017. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தற்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், ஏறக்குறைய பத்து இலட்சம் மக்களுக்கு உடனடி உணவு உதவி தேவைப்படுகின்றது என, ஐ.நா.வும், இலங்கை அரசும் கூறியுள்ளன.

மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, வாழ்வைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஏனைய உதவிகளும் தேவைப்படுகின்றன எனவும், ஐ.நா.வும், இலங்கை அரசும் கூறியுள்ளன.

பேரிடர் தடுப்பு நிர்வாக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏறக்குறைய 9 இலட்சம் பேருக்கு அவசர உணவு உதவியும், ஏறக்குறைய 80 ஆயிரம் பேருக்கு வாழ்வைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஏனைய உதவிகளும் தேவைப்படுகின்றன எனச் சொல்லப்பட்டுள்ளது.

இலங்கையின் 25 மாவட்டங்களில் 23, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.