2017-05-26 15:51:00

திருத்தந்தை, யூத சீர்திருத்த ஒன்றியத் தலைவர் சந்திப்பு


மே,26,2017.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, யூதமதச் சீர்திருத்த ஒன்றியத்தின் தலைவர் ரபி Rick Jacobs அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

இன்னும், இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பின் தலைவரான கொலம்பியாவின் கர்தினால் Rubén Salazar Gómez அவர்கள் தலைமையிலான, அந்தக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் குழுவினரையும், இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், “நம் சமூகங்களின் வருங்காலத்திற்கு, வாழ்வுக்கு ஆதரவான தெளிவான நடவடிக்கைகள், நம் ஒவ்வொருவரிலும், குறிப்பாக, நிறுவனங்களில் தேவைப்படுகின்றன” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியில், இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், வருகிற ஜூன் நான்காம் தேதி ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் தூய ஆவியார் பெருவிழா திருப்பலி பற்றி அறிவித்துள்ளார், திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான, பேரருள்திரு குய்தோ மரினி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் தூய ஆவியார் பெருவிழா திருப்பலி,  வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், காலை பத்து முப்பது மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சனிக்கிழமையன்று இத்தாலியின் ஜெனோவா நகருக்கு ஒருநாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.