2017-08-18 16:12:00

இறைவனின் அன்பு, இரக்கத்தை எப்போதும் கண்டுணர..


ஆக.18,2017. சிறாரிடம் பாலியல் முறையில் தவறாகப் நடக்கும் அருள்பணியாளர்கள் மற்றும், அக்குற்றம் செய்வோருக்குப் பாதுகாப்பளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உறுதிபூண்டுள்ளதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் 58 வயது நிரம்பிய Daniel Pittet என்பவர், "அருள்தந்தையே, உங்களை நான் மன்னிக்கின்றேன், தவறாகப் பயன்படுத்தப்பட்டாலும், சிதைந்துவிடவில்லை (Father, I Forgive You: Abused But Not Broken)" என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலுக்கு, அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

பாலியல்முறையில் தவறாகப் பயன்படுத்துவது, திருஅவையின் போதனைக்கு முரணானது என்றும், இந்தத் தவறுகளைச் செய்பவர்களை திருஅவை பொறுத்துக்கொள்ளாது என்றும் திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

Daniel Pittet என்பவருக்கு எட்டு வயது நடந்தபோது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர். 

ஆதாரம் : Reuters /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.