2017-09-16 17:02:00

மாசுக்கேட்டை குறைக்க, ஏழை நாடுகளின் வளர்ச்சியை அதிகரிக்க...


செப்.16,2017. சுற்றுச்சூழல் மாசுக்கேட்டை அகற்றல் மற்றும் வறுமைப்பட்ட நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுதல் என்ற இரண்டையும் வலியுறுத்தி, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'சுற்றுச்சூழ்ழல் மாசுக்கேட்டை குறைக்கவும், அதேவேளையில், ஏழை நாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உலக அளவிலான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகின்றது.

மேலும், இச்சனிக்கிழமையன்று, ஆயர்கள் திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால Marc Ouellet அவர்களையும், பின்னர், 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த  நிகாராகுவா நாட்டு ஆயர்களையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.