2017-10-30 15:46:00

அணு ஆயுத ஒழிப்பிற்கு திருப்பீடம் எடுக்கும் பெரும் முயற்சிகள்


அக்.30,2017. அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்துடன் முயற்சிகளை மேற்கொண்டுவரும் திருஅவை, அணு ஆயுதங்களற்ற ஓர் உலகு என்ற தலைப்பில், வரும் வாரத்தில், முக்கிய கருத்தரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது என்றார் திருப்பீடத்தின் செய்தி தொடர்பு அதிகாரி Greg Burke.

அணு ஆயுதமற்ற ஓர் உலகை உருவாக்குவதற்கு இயைந்த சூழலை அமைத்துத் தர முழு உறுதிப்பாட்டுடன் செயல்பட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே கருத்தை வலியுறுத்தி, கடந்த மார்ச் மாதம் ஐ.நா. நிறுவனத்திற்கு வழங்கிய செய்தியையும் சுட்டிக்காட்டினார், திருப்பீட தகவல்துறை உயர் அதிகாரி Burke..

வரும் வாரத்தில் இடம்பெற உள்ள, 'அணு ஆயுதமற்ற உலகம், மற்றும், ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு வாய்ப்புகள்' என்ற தலைப்புடன் கூடிய கருத்தரங்கை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை ஏற்பாடுச் செய்துள்ளது என உரைத்த Burke அவர்கள், அணு ஆயுத விவகாரங்களில், திருப்பீடம், நடுநிலையாளராக செயல்பட உள்ளது என்பது குறித்து வெளியாகிவரும் செய்திகள் தவறானவை எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.