இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளான நவம்பர் 2ம் தேதி நிறைவேற்றிய திருப்பலியில், “கல்லறைகளையும், மரணத்தையும் தவிர, வேறு எதையுமே போர்கள் கொணர்வதில்லை. இதுவரை நிகழ்ந்துள்ள போர்களிலிருந்து மனித சமுதாயம் பாடங்களைக் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை” என்று மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். இலங்கை உள்நாட்டுப் போரில் தன் உறவுகளை இழந்த அன்னையரைப்பற்றி பணிப்புலம் என்ற இணையத்தளத்தில் காணப்படும் கவிதையிலிருந்து சில வரிகள்:
போரினால் தம் பிள்ளைகளைப் பிரிந்து தவிக்கும்
தாய்மையின் தவிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது...
மூன்று தசாப்தகால யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டதை
உலகம் அறிவித்துக்கொண்டிருக்கிறது.
பிள்ளைகளைப் பிரிந்த தாய்மாரும் தாய்மாரைத் தேடும் பிள்ளைகளும்
கண்ணீர் தேங்கிய விழிகளுடன் அந்த அறிவிப்பை
வெறித்துப்பார்த்தபடி கடந்து போகின்றார்கள்.
அவர்கள் துயரங்கள் முடியாத போதில் யுத்தம் முடிந்தது பற்றி
அவர்களுக்கு அக்கறை கிடையாது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |