2017-11-24 15:29:00

தந்தையே என்பதன் பொருளை உணராமல் செபிக்க முடியாது


நவ.24,2017. “தவறிழைத்தவர்களுக்கும் நம்பிக்கை உள்ளது. அவர்கள் இறைவனோடு ஒப்புரவாகி, புதிய வாழ்வைத் தொடங்குவது இயலக்கூடியதே. இதற்காகவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.

மேலும், ‘எங்கள் வானகத் தந்தையே என்று செபிக்கும்போது’ என்ற புதிய நூலுக்கு, முன்னுரை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

வானகத் தந்தையே என்ற சொல்லின் பொருளை உணராமல், செபிக்க முடியாது என்றும், நம்மைப் படைத்தவரையும், நமக்கு வாழ்வு தந்தவரையும் நோக்கி நாம் கட்டாயம் செபிக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், இத்தாலியின் வெரோனா நகரில், நவம்பர் 23, இவ்வியாழன் முதல், நவம்பர் 26, இஞ்ஞாயிறு முடிய நடைபெறும், 7வது திருஅவையின் சமூகக் கோட்பாட்டு விழாவுக்கு காணொளிச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.