2018-02-07 15:59:00

இல்லம் நோக்கி திருப்பயணம் - முன்னாள் திருத்தந்தையின் மடல்


பிப்.07,2018. "உடலால் நான் தளர்ந்துவருவதை உணரும் இவ்வேளையில், வானக இல்லம் நோக்கி என் திருப்பயணம் நடந்து வருகிறது என்பதை என்னால் உணரமுடிகிறது" என்று, முன்னாள் திருத்தந்தை, அண்மையில் எழுதிய ஒரு மடலில் கூறியுள்ளார்.

Corriere della Sera என்ற இத்தாலிய நாளிதழுக்கு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் எழுதியுள்ள இம்மடல், பிப்ரவரி 7, இப்புதனன்று வெளியானது."உடலால் நான் தளர்ந்துவருவதை உணரும் இவ்வேளையில், வானக இல்லம் நோக்கி என் திருப்பயணம் நடந்து வருகிறது என்பதை என்னால் உணரமுடிகிறது" - முன்னாள் திருத்தந்தை,

இம்மடலில்,  தான் மேற்கொண்டுள்ள இந்த இறுதிக் கட்டப் பயணத்தில், அவ்வப்போது பெரும் களைப்பை தான் உணர்வதாகவும், அதேவேளையில், அன்பாலும், நன்மைத்தனத்தாலும் தான் சூழப்பட்டிருப்பதை உணர முடிகிறது என்றும், முன்னாள் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் திருத்தந்தையின் உடல்நலம் குறித்து கவலை தெரிவித்து, Corriere della Sera நாளிதழுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களை, Massimo Franco என்ற செய்தியாளர், முன்னாள் திருத்தந்தைக்கு அனுப்பி வைத்ததையடுத்து, 16ம் பெனடிக்ட் அவர்கள், இந்த பதில் மடலை அனுப்பியுள்ளார்.

தன் மீது விசுவாசிகள் இவ்வளவு அக்கறை கொண்டுள்ளதைக் கண்டு தான் மனநிறைவு கொள்வதாகக் கூறியுள்ள முன்னாள் திருத்தந்தை, அவர்களது செபங்கள் தன்னுடன் உள்ளதை உணர்வதாகவும் அவர்களுக்காக செபிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.