2018-04-14 14:49:00

இறைவா உமக்கே புகழ் திருமடல் பற்றி பேராயர் யுர்க்கோவிச்


ஏப்.14,2018. நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதற்கு, உலகினர் எல்லாரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று, திருப்பீட அதிகாரி ஒருவர், ஜெனீவாவில் நடைபெற்ற உலக அன்னை பூமி தின நிகழ்வில் கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 13, இவ்வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் நடைபெற்ற இந்நிகழ்வில்  உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் ஏனைய பன்னாட்டு நிறுவனங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், நம் திருத்தந்தையின், இறைவா உமக்கே புகழ் திருமடல் (Laudato si’) பற்றிய சிந்தனைகளை வழங்கினார்.

இயற்கையை நம்மிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்றும், நாம் இயற்கையின் ஓர் அங்கம் என்றும் உரையாற்றிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், மனிதர் இவ்வுலகின் படைப்புகள் என்பதால், அனைத்து மக்களின் வாழ்வைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் அழிவைப் பார்த்து, செயலற்று இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

உலக அன்னை பூமி நாள், ஏப்ரல் 22ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த உலக நாளை, ஐ.நா.பொது அவை, 2009ம் ஆண்டில் உருவாக்கியது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.